
தித்திக்கும் தேன்பாகும் திகட்டாத தெள்ளமுதும்
தீஞ்சுவை யாகவில்லையே - முருகையா
தீஞ்சுவை யாகவில்லையே.
தீஞ்சுவை யாகவில்லையே - முருகையா
தீஞ்சுவை யாகவில்லையே.
எத்திக்கும் புகழ்க் கந்தன் இன்சொல் எழுத்தினைப் போல
இன்பம் ஏதும் இல்லையே குமரையா
இன்பம் ஏதுமில்லையே.
இன்பம் ஏதும் இல்லையே குமரையா
இன்பம் ஏதுமில்லையே.
அத்தரும் சவ்வாதும் அள்ளியே பூசிடினும்
அங்கம் மணக்கவில்லையே - முருகையா
அங்கம் மணக்கவில்லையே.
அங்கம் மணக்கவில்லையே - முருகையா
அங்கம் மணக்கவில்லையே.
சித்தம் மணக்கும் செல்வக் குமரன் பெயரினைப்போல
சீர்மணம் வேறு இல்லையே - குமரையா
சீர்மணம் வேறு இல்லையே.
சீர்மணம் வேறு இல்லையே - குமரையா
சீர்மணம் வேறு இல்லையே.
முத்தும் ரத்தினமும் முத்திரைப் பசும்பொன்னும்
முதற்பொருளாகவில்லையே - முருகையா
முதற்பொருளாகவில்லையே.
முதற்பொருளாகவில்லையே - முருகையா
முதற்பொருளாகவில்லையே.
சத்திய வேலென்று சாற்றும் மொழியினைப் போல
மெய்ப்பொருள் ஏதுமில்லையே - குமரையா
மெய்ப்பொருள் ஏதுமில்லையே.
மெய்ப்பொருள் ஏதுமில்லையே - குமரையா
மெய்ப்பொருள் ஏதுமில்லையே.
எண்ணற்ற தெய்வங்கள் எத்தனை இருந்தாலும்
எண்ணத்தில் ஆடவில்லையே - முருகையா
எண்ணத்தில் ஆடவில்லையே.
எண்ணத்தில் ஆடவில்லையே - முருகையா
எண்ணத்தில் ஆடவில்லையே.
மண்ணுக்குள் மகிமைபெற்ற மாமலை முருகன் போல்
மற்றொரு தெய்வமில்லையே.
மற்றொரு தெய்வமில்லையே.
தித்திக்கும் தேன்பாகும் திகட்டாத தெள்ளமுதும்
தீஞ்சுவை யாகவில்லையே - முருகையா
தீஞ்சுவை யாகவில்லையே.
தீஞ்சுவை யாகவில்லையே - முருகையா
தீஞ்சுவை யாகவில்லையே.
முருகாசரணம்..
No comments:
Post a Comment