Pages

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing

Lord Murugan Community

Popular Posts

Thursday, 18 August 2016

முருகையா தீஞ்சுவை யாகவில்லையே


தித்திக்கும் தேன்பாகும் திகட்டாத தெள்ளமுதும்
தீஞ்சுவை யாகவில்லையே - முருகையா
தீஞ்சுவை யாகவில்லையே.
எத்திக்கும் புகழ்க் கந்தன் இன்சொல் எழுத்தினைப் போல
இன்பம் ஏதும் இல்லையே குமரையா
இன்பம் ஏதுமில்லையே.
அத்தரும் சவ்வாதும் அள்ளியே பூசிடினும்
அங்கம் மணக்கவில்லையே - முருகையா
அங்கம் மணக்கவில்லையே.
சித்தம் மணக்கும் செல்வக் குமரன் பெயரினைப்போல
சீர்மணம் வேறு இல்லையே - குமரையா
சீர்மணம் வேறு இல்லையே.

முருகனின் அறுபடை வீடுகளின் விளக்கம்

முருகனின் அறுபடை வீடுகளை பற்றிய தொகுப்பை கீழே பார்க்கலாம்.
முருகனின் அறுபடை வீடுகளின் விளக்கம்
திருப்பரங்குன்றம் :
ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். அசுரனை வென்ற அவர் இந்த தலத்தில் இந்திரனின் மகளான தெய்வானையை திருமணம் செய்து கொண்டார். முருகன் அமர்ந்த கோலத்தில் இருப்பது சிறப்பு. இத்தலத்தில் மலை வடிவில் சிவபெருமான் அருள்புரிகிறார். சிவனின் பெயரால் இத்தலம் "திருப்பரங்குன்றம்' எனப்படுகிறது. முருகனின் அருகில் நாரதர் தாடியுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, 21 May 2016

வைகாசி பெளர்ணமி, வைகாசி விசாகம்....இன்றைய தினம் முருகனை ,சித்தர்களை வழிபடுவது மிகுந்த மன பலத்தை தரும்

அழகன் முருகன் அப்பனுக்கு பாடம் சொன்ன எங்கள் சுப்பையா குருவே உன்தாள்பணிவோருக்குவளமும்நலமும் கிடைக்கட்டும்!!