பணம் இருந்தால் வீடுகட்டிக் குடியேறி விடலாம். நன்றாக வாழத் தொடங்கலாம் என்று கைநிறைய பணத்தைச் சேர்த்து வைத்துக் கொண்டு வாஸ்து பகவான் விழிக்கும் நாளில் குறித்த நேரத்தை விட்டு தொடங்குகின்றனர்.
முதலில் வாஸ்து பகவான் விழித்தெழும் நாளைக்குறித்து வைத்துக்கொண்டு பூஜை பொருட்களை சேகரித்து முதல் நாளே தயாராகிவிட வேண்டும். வாஸ்து பகவான் விழித்தெழும் காலம் காலை 9.30 மணி முதல் 10.32 மணி வரை என்று வைத்துக் கொள்வோம். அந்த ஆரம்ப நேரத்தில் விநாயகர் பூஜையைத் தொடங்கிவிட வேண்டும்.
