Pages

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing

Lord Murugan Community

Popular Posts

Sunday, 23 August 2015

கந்தன் அருளோடு இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்.

 

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன்
கருங்கல்லானாலும் தணிகைமலையில் கல்லாவேன்

சீனர்களும் விரதமிருந்து வழிபடும் தைப்பூச விரதம்

 
தைப்பூசம் என்பது உலகெல்லாம் கட்டிக்காக்கும் அன்னை பராசக்தி மைந்தன் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் விழாவாகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பார்கள்.

Friday, 21 August 2015

திருப்புகழை தினமும் 6 தடவை பாராயணம் செய்து வந்தால் உடனே தடைகள் விலகி திருமணம் நடைபெறும்

திருச்செந்தூர் திருப்புகழ் மிக மிக சக்தி வாய்ந்தது. இதில் ``விறல் மாரனைந்து'' எனும் திருப்புகழை தினமும் 6 தடவை பாராயணம் செய்து வந்தால் உடனே தடைகள் விலகி திருமணம் நடைபெறும்.

திருமுருக கிருபானந்த வாரியார் அறிவுறுத்தலின் பேரில் ஏராளமானவர்கள் தினமும் திருச்செந்தூர் திருப்புகழைப் பாராயணம் செய்து நல்ல வரன் பெற்று கல்யாணம் செய்துள்ளனர்.
சிறப்புமிகு அந்த திருப்புகழ் இதோ:-
விறல் மாரனைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிருந்து - வெயில் காய
மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம் - வசை கூற
குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடி தான துன்ப - மயில்தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறை தீர வந்து குறுகாயோ
மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து
வழிபாடு தந்த மதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை அஞ்ச
வடிவேலெ றிந்த அதிதீரா
அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு
மடியாரி டைஞ்சல் களைவோனே
அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து
அலைவாயு கந்த பெருமாளே!

-குழந்தை பாக்கியம் பெற விரும்புபவர்கள் கீழ்க்கண்ட திருச்செந்தூர் திருப்புகழை தினமும் பாராயணம் செய்ய வேண்டும். இது சக்தி வாய்ந்தது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனத்தெளிவான தன்னம்பிக்கையுடன் இதை பாராயணம் செய்தால் நிச்சயம் முருகன் அருளால் உங்களுக்கு மகப்பேறு உண்டாகும்.
இதோ அந்த திருப்புகழ்... ... வாரியார் கருங்கன் மடமாதர் மகவாசை தொந்த மதுவாகி இருபோது நைந்து மெலியாதே இருதாளி னன்பு தருவாயே! பரிபால னஞ்செய் தருள்வோனே பரமேசு ரன்ற னருள்பாலா அரிகேச வன்றன் மருகோனே அலைவா யமர்ந்த பெருமாளே..!!

Tuesday, 21 July 2015

பூமி பூஜை போடுவது எப்படி

பணம் இருந்தால் வீடுகட்டிக் குடியேறி விடலாம். நன்றாக வாழத் தொடங்கலாம் என்று கைநிறைய பணத்தைச் சேர்த்து வைத்துக் கொண்டு வாஸ்து பகவான் விழிக்கும் நாளில் குறித்த நேரத்தை விட்டு தொடங்குகின்றனர்.
முதலில் வாஸ்து பகவான் விழித்தெழும் நாளைக்குறித்து வைத்துக்கொண்டு பூஜை பொருட்களை சேகரித்து முதல் நாளே தயாராகிவிட வேண்டும். வாஸ்து பகவான் விழித்தெழும் காலம் காலை 9.30 மணி முதல் 10.32 மணி வரை என்று வைத்துக் கொள்வோம். அந்த ஆரம்ப நேரத்தில் விநாயகர் பூஜையைத் தொடங்கிவிட வேண்டும்.

வார தீப பூஜை

ஞாயிறு:-
ஞாயிற்றுக்கிழமை அய்யப்பனுக்கு நூறு தீபங்கள் ஏற்றுதல் விசேஷம். தீபங்களைத் தாமரைப் பூ வடிவில் ஏற்றுவது மிகவும் சிறப்புடையது. அதாவது தாமரைப்பூ போன்ற அமைப்பில் தீபங்களை வரிசையாக வைத்து ஏற்றுதல் வேண்டும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யப்படும் இத்தீப வழிபாடுகளுக்குத் தேங்காய் எண்ணை பயன்படுத்துவது சிறந்தது. இதுபோன்று தீபங்கள் ஏற்றி வழிபடுவதால் வருமானங்கள் தடையை மீறி வருவதற்கு சந்தர்ப்பம் உண்டு.

வள்ளி மணாளன் அருளோடு இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்

தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம்
தெருமுழுதும் பக்தர்களில் ஆனந்தமன்றம் 
தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை
தாங்கிக் கொண்டாள் வாங்கிக் கொண்டாள் முருகப் பெருமானை
தாங்கிக் கொண்டாள் வாங்கிக் கொண்டாள் முருகப் பெருமானை